search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைவர் அமித்ஷா"

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் இன்று புனித நீராடினர். #KumbhMela #BJP #AmitShah #YogiAdityanath
    லக்னோ:

    உ.பி.யின் பிரயாக்ராஜ் நகரில் நடக்கிற கும்பமேளா மிகவும் பிரசித்திப் பெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, உலகெங்கிலும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் புனித நீராடுவது வழக்கம்.

    அந்த வகையில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் 4-ம் தேதி வரை தொடர்ந்து 50 நாட்கள் இந்த விழா நடைபெறுகிறது.



    கும்பமேளாவில் புனித நீராடுவதற்கு உலகெங்கிலும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை புரிந்துள்ளனர். 

    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் இன்று புனித  நீராடினர். அத்துடன், கங்கை நதிக்கு ஆரத்தி காண்பித்து பரவசத்துடன் வழிபட்டனர். #KumbhMela #BJP #AmitShah #YogiAdityanath
    பாஜக சார்பில் மால்டாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பாஜக தலைவர் அமித்ஷா, மேற்கு வங்காளத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில் பாராளுமன்ற தேர்தல் அமையும் என தெரிவித்தார். #BJP #AmitShah #ParliamentElection #TMC
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலம் மால்டாவில் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை இன்று தொடங்கியுள்ளேன். இந்த தேர்தல் வங்காளத்துக்கு மட்டும் அல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது.

    மேற்கு வங்காளத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில் பாராளுமன்ற தேர்தல் அமையும். இந்தத் தேர்தல், எதேச்சதிகாரமான திரிணாமுல் காங்கிரஸ் அரசு நிலைத்திருக்க வேண்டுமா அல்லது தூக்கி எறியப்பட வேண்டுமா என்பதை தீர்மானிப்பதாக இருக்க வேண்டும்.



    பாஜக நடத்தும் யாத்திரையை வேண்டுமானால் மம்தா பானர்ஜியால் தடுத்து நிறுத்த முடியும். ஆனால் மக்களின்  மனங்களில் இருந்து எங்களை நீக்க முடியாது.

    தற்போது இங்கு வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் பெருகி விட்டன. ரவீந்திரநாத் தாகூரின் கீதங்கள் காற்றில் கலந்த வங்காளத்தில் இன்று வெடிகுண்டு புகை நாற்றம் கலந்துள்ளது.

    பாஜகவால் மட்டுமே மேற்கு வங்காளத்தின் பழைய மகிமையை மீண்டும் கொண்டுவர முடியும். நியாயமான ஆட்சியை மோடியால் மட்டுமே வழங்க முடியும்.

    சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மூலம் வங்காள மொழி பேசும் இந்து மக்கள் அனைவருக்கும் இந்தியாவில் தஞ்சம் அளிக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார். #BJP #AmitShah #ParliamentElection #TMC
    ×